ஞாயிறு, 4 அக்டோபர், 2009

ரங்கமணிக்கு நன்றி

எங்க வீட்டு ரங்கமணி புண்ணியத்துல போன வாரம் ஒரு கேரளா ட்ரிப் அடிச்சுட்டு வந்தோம். பரவாயில்ல மனுஷன் நல்லாவே கார் ஓட்டறாரு. மலைப்பாதைல கூட ஜாலியா பாட்டு பாடிட்டே ஒட்டினாறு. நமக்கு தான் மோதல் கொஞ்ச நேரத்துக்கு பயத்துல ஜுரம் வந்துடுச்சு. ஆனா நாம வெளில காமிப்பமா??!!! ரொம்ப தைர்யமா கூடவே பாடிட்டே வந்தோம்ல!

மொதல்ல குருவாயூர் போய் ஒரு நாள் தங்கி சாமி தரிசனம் செஞ்சுட்டு அப்படியே குருவாயூரையும் சுத்திப் பார்த்தோம். அடுத்தநாள் காலைல ஜி பி எஸ் உதவியோட அதிரப்பள்ளி போயிட்டு அப்படியே திரிச்சூர் வந்து வடக்கு நாதரைப் பார்த்துட்டு கெளம்பி வந்தோம்.

ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல பிரேக். தேங்க்ஸ் டு ரங்கமணி!!

ட்ரிப் பத்தின விரிவான செய்திகள அடுத்த பதிவுல போடறேன்.

நம்ம வீட்டு கொலு

நம்ம வீட்டு கொலுவுக்கு வந்தவங்களுக்கெல்லாம் நன்றி .
வர முடியாதவங்களுக்காக இதோ சில புகைப்படங்கள்:
































திங்கள், 21 செப்டம்பர், 2009

கொலு அழைப்பிதழ்

எல்லாருக்கும் வணக்கம்.
இந்த வருஷமும் எங்க வீட்ல விமரிசையா (எங்க அளவுல) கொலு வெச்சாச்சு.

இந்த அழைப்பையே எங்களோட தனிப்பட்ட அழைப்பாகக் கருதி நீங்க எல்லாரும் வெத்தல பாக்கு வாங்கிக்க வந்திருந்து இந்த நவ ராத்ரிய சிறப்பிச்சு தரனும்முன்னு கேட்டுக்கறோம்.

நன்றி!

புதன், 9 செப்டம்பர், 2009

ஒரு தொலைபேசி உரையாடல்

நேற்று விஷ்வநாதன் அங்கிளுக்கு போன் செய்திருந்தேன்.
அங்கிள்: ஹலோ
நான்: அங்கிள், நான் தான்
அங்கிள் (ஒரு வினாடிக்குப் பிறகு): நான்னா? ஆத்மாவா, உயிரா, இல்ல ஒடம்பா?
நான் (சிறிது திகைத்து): 'நான்' இன்னும் இருக்க ஒரு ஆத்மா
அங்கிள்: ஓஹோ. நான் தன்தூர்ல இருக்க நானோன்னு நெனச்சேன்
நான்: நானும் தந்தூர்ல இருக்கற ஒரு 'நான்' தான். தந்தூர்ல இருக்கறதால தான் 'நான்' இன்னும் இருக்கோ?
அங்கிள்: ஹா ஹா ஹா
நான்: இல்ல ஒருவேள 'நான்' இன்னும் இருக்கறதால தான் இன்னும் தந்தூர்ல இருக்கேனோ?!!
அங்கிள்: ஹா ஹா ஹா... இருக்கலாம்! யோசிக்க வெக்கற விஷயம் தான்.


இதற்குப் பிறகு நாங்கள் பல்வேறு விஷயங்கள் பேசினோம். ஆனால் மேல் சொன்ன உரையாடல் எங்களை யோசிக்க வைத்தது!!!

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!!

நாளை ஆசிரியர் தினம்.
ஆசிரியப் பணியின் மேல் கொண்டிருந்த தீரா ஆசையினால் எம்.சி. முடித்த பின்னரும் என்...டி யில் faculty ஆகா சேர்ந்தேன். இன்று பல்வேறு காரணங்களால் ஆசிரியப் பணியில் தொடர முடியா விட்டாலும் என்றாவது ஒரு நாள் மீண்டும் அத்துறைக்கு செல்ல வேண்டும் என்ற தாகம் என்னுள் இன்னும் இருக்கிறது. இன்று என்னுடைய எத்தனை மாணவர்கள் என்னை நினைத்துக் கொள்கிறார்களோ எனக்கு தெரியாது. ஆனால் இதோ நான் நினைத்துக்கொள்ளும் என்னுடைய ஆசிரியர்கள்!!!

  • எல்.கே.ஜி யில் எனக்கு உணவு ஊட்டி அன்பு செலுத்திய காஞ்சனா மிஸ்
  • முதல் வகுப்பெடுத்த வாசுகி மிஸ்.
  • "நீங்க என்ன ஜாதி?" என்று அறியா வயசில் நான் கேட்ட கேள்விக்கும் "நான்பெண் ஜாதி" என்று புன்னகை மாறாமல் பதில் சொன்ன சங்கமித்ரா மிஸ்.
  • அன்றே என்னுள் இருந்த தமிழார்வத்தை புரிந்து கொண்டு என்னை தமிழ்வகுப்புக்கு லீடர் ஆக்கிய ஜெயலக்ஷ்மி மிஸ்
  • ஏழாம் வகுப்பில் நான் மிகவும் வெறுத்த பள்ளியில் படித்த போதும் என் மீது அன்புசெலுத்திய ரத்னா ஜோசப் மிஸ்
  • எட்டாம் வகுப்பில் முதல் முறையாக 'கான்வென்ட்' பள்ளியின் புதியசூழ்நிலையில் சேர்ந்த போது என்னை அரவணைத்த ஆங்கில டீச்சர் ஸ்டெல்லாமிஸ்
  • எனக்கு மிகவும் பிடிக்காத பாடமான கணிதத்தை எனக்கு மிகவும் பிடிததாக்கியஉமா அக்கா
  • கண்டிப்பான மாலா மிஸ்
  • "எங்கோ பொணம் எரியுதுலே" என்றவாறு போர் அடிக்கும் ஜாக்ரபியையும் ஒருபாடமாக எங்களுக்கு கற்று தர பிரயத்தனப் பட்ட செபஸ்டின் சார்
  • container contains water, water contains molecules என்று மறக்க முடியாத படி பாடம்எடுத்த சம்பத் சார்
  • ப்ரிசம் உடைததற்க்காக என்னைக் காய்ச்சி எடுத்த பலராமன் சார்
  • ஏனோ என்னை பிடிக்காமல் போன அருணா மிஸ்
  • என் தமிழார்வத்துக்கு மேலும் ஊன்று கோலிட்ட லிடியா மிஸ்
  • ஒவ்வொரு மாணவரையும் தனித் தனியாக அறிந்திருந்த, அன்பு கொண்டிருந்த, ஆசிரியப் பணியின் மீது பெரு மதிப்புக் கொண்டிருந்த எங்கள் பிரின்சிபால் மிராசு டேவிட் சார்
  • இவர்கள் எல்லோருக்கும் மேலாக, என்னை எனக்கு உணர்த்தி, என் திறமைகளை வெளிக் கொணர்ந்த என் மதிப்பிற்குரிய ப்ரோடோ மிஸ்.

உணர்ச்சி மிகுதியில் ஓரிருவரை நான் இங்கு விட்டிருந்தாலும் அவர்களும் என் நினைவில் அவ்வப்போது வந்து போக தவறியதில்லை.

இதே போல, நான் பாடம் நடத்திய யாரேனும் ஒரு மாணவருக்கவது நான் இவ்வாறு நினைவிற்கு வந்திருப்பேனா?
இது ஒரு ஆசிரியையின் எதிர்பார்ப்பு!!!!

எது நாகரீகம்?

இது ஒரு சில வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம்.

ஒரு நாள், நாங்கள் முன்பு குடி இருந்த வீட்டின் சொந்தக்காரருக்கு வாடகையை தர மகளுடன் சென்றிருந்தோம். அப்போது என் மகளுக்கு நான்கு வயதிருக்கும். அவர்கள் வீட்டில் எங்களுக்கு ஒரு சிறிய கப்பில் மிக்ஸ்ச்சரும் ஸ்வீட்டும் தந்தார்கள். நாங்கள் நாகரீகம் கருதி சிறிது மிக்ஸ்ச்சர் மட்டும் எடுத்துக் கொண்டு விட்டு அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது என் மகள் அவளுடைய ஸ்வீட்டை தின்று விட்டு பின்னர் எங்களுக்காக வைத்திருந்த ச்வீட்டையும் எடுத்துத் தின்றாள். நாங்கள் நாகரீகம் கருதி அங்கு ஏதும் பேசாமல் இருந்து விட்டோம். பின்னர் வெளியே வந்த பிறகு நான் அவளிடம், "யார் வீட்டிலாவது தின்பதற்கு ஏதாவது கொடுத்தால் இப்படி எல்லாவற்றயும் தின்னக் கூடாது. அது அநாகரீகம்" என்றேன். அநாகரீகம் என்றால் என்ன என்று புரியாத அவள் என்னிடம், "ஆனால் அம்மா, நாம் சாப்பிடக் கூடாது என்று அவர்கள் நினைத்தால் பின்பு எதற்கு அவற்றை நம்மிடம் கொடுத்தார்கள்?" என்று கேட்டாள்.

அன்று முதல் முறையாக, நாகரீகத்தைப் பற்றி நாம் தவறான கருத்துக்கள் கொண்டிருக்கிறோமோ என்று எண்ணினேன்.

படித்ததில் பிடித்தது

தங்கமணியும் ரங்கமணியும்!!
இங்கே கிளிக் செய்யவும்

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

அந்நியன் ஆன ஆனியன்

மு.கு. :
) இந்தப் பதிவு பள்ளிக்கால நினைவுகளை எழுதுமாறு கேட்டிருந்த என் நண்பர்களுக்காக.
)ஆனியனுக்கும் பள்ளிக்கால நினைவுகளுக்கும் என்ன சம்பந்தம் என்று வியப்பவர்களுக்கு விடை, பதிவின் முடிவில்.
)அந்த சம்பந்தத்தை பதிவின் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தவர்கள், நமது பள்ளி தாளாளர் பிறந்தநாள் அன்று பள்ளி சென்று லட்டை பரிசாக பெற்றுக்கொள்ளவும்.

எங்கள் பள்ளியில் பயாலஜி பிரிவின் தலைவர் திருமதி. அக்கம்மா தாமஸ். இவரை எங்கள் எல்லாருக்கும் 'மிகவும் பிடிக்கும்'. எவ்வளவு பிடிக்கும் என்பதற்கு ஒரு உதாரணம். எல்லோரும் தம் பள்ளி ஆசிரியர்களுக்கு புனைப்பெயர் வைப்பார்கள். நாங்கள் ஒரு படத்தின் பாடலையே அவருக்காக மாற்றி எழுதி இருந்தோம். அது தளபதி படம் வந்த புதிது. அப்படத்தில் வரும் 'ராக்கம்மா கைய தட்டு' பாடலையே நாங்கள் ' அக்கம்மா கைய தட்டு' என்று மாற்றி படும் அளவுக்கு அவர் மேல் பிரியம். இத்தனைக்கும் அவர் எங்களையெல்லாம், "I will fix you in the practicals" என்று அன்பைப் பொழிந்ததெல்லாம் இல்லை! (மேற்சொன்னவாறு அன்பைப் பொழிந்த அருணா மிஸ்ஸைப் பற்றி வேறொரு பதிவில் பார்க்கலாம்.) இவரை மட்டும் அல்ல. பயாலஜி பிரிவில் இருந்த மற்ற ஆசிரியர்களான 'கண்ணாடி' சுரேஷ் சார் மற்றும் எலிகேசி என்று அன்புடன் அழைக்கப்பட்ட புலிகேசி சேனாபதி சாரையும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இப்போது ஆனியனுக்கு வருவோம். இவ்வாறு நாங்கள் பேரன்பு கொண்டிருந்த அக்கம்மா மிஸ் ஒரு மலையாளீ. அவர் ஆனியனுக்கு கொடுத்திருந்த மற்றொரு "பயாலாஜிகல்" பெயரே அணியன். அவரின் முதல் வகுப்பே எங்களுக்கு ஆனியனைப பற்றியது தான். அவரின் உச்சரிப்பு புரியாததாலும், அதுவரை பாட புத்தகம் (எப்போதும் போல்) வெளிவராததாலும் அணியன் எது என்று எங்களுக்கு பல நாட்க்களுக்கு புரியாமல் போய் ஒரு வித பயாலஜிகல் ஜுரமே வந்து விட்டது. பயாலஜி பய அலர்ஜி ஆகிப்போனது. பின்னர் பாட புத்தகம் வந்ததும், நாங்கள் முதலில் பிரித்துப் படித்தது அணியன் தான். அன்று நாங்கள் சிரித்த சிரிப்பு.... ஜுரம் விட்டதால் வந்த சிரிப்பு!!!

இந்த நிகழ்ச்சியின் பின், அணியன் எனப்பட்ட ஆனியனை என்றும், எப்போதும், எந்த வடிவிலும் பார்த்தாலும் எனக்கு அக்கம்மா மிஸ்ஸின் ஞாபகம் தவறாமல் வரும். இப்படிப்பட்ட அக்கம்மா மிஸ்ஸை நான் சிலவருடங்களாக மறந்து போனேன். அதுவும் என் மகளால். அவளுக்கு எந்த உணவிலும் வெங்காயம் ஏனோ பிடிக்காமல் போனது. (ஒரு வேளை அவளுக்கும் அக்கம்மா என்ற பெயரில் யாராவது ஒரு டீச்சர் வந்தால் அதன் பின் பிடிக்கலாம்!) அதனால் நாங்கள் எங்கள் உணவில் பெருமதிப்பிற்குரிய ஆனியனை தவிர்த்தோம். இவ்வாறாக, அணியன் எனப்பட்ட ஆனியன் எங்களுக்கு அந்நியனாகிப் போனது!



புதன், 19 ஆகஸ்ட், 2009

இன்றும் அன்றும்

இன்று:
இன்று காலை ஏழு மணிக்கு அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். எதிர்ப்புறச் சாலை காலியாக இருந்ததால், முன்னே சென்ற ஒரு காரை வலது புறமிருந்து ஓவர்டேக் செய்தேன். அப்போது எதிர்பாராமல் எதிரே வந்த ஆட்டோவிலிருந்து கன்னடத்தில் ஒரு குரல். ஆடோக்காரர் கன்னடத்தில் ஏதோ திட்டிச்சென்றார். அது முக்கால் வாசி "சாவுக்ராக்கி"யாக இருக்கக்கூடும்!

அன்று:
எங்கள் ஏரியா தவிர வேறு எங்கும் சைக்கிள் ஓட்டியிராத நானும் என் தோழியும் ஒரு நாள் முதல் முறையாக சைக்கிளில் கல்லூரி சென்று கொண்டிருந்தோம். அதுவரை என் பக்கத்தில் வந்து கொண்டிருந்த என் தோழி, திடீரென வலது பக்கம் ஓட்ட துவங்கி இருந்தாள். அப்போது எதிர்ப்பக்கம் ஒரு கார் வேகமாக வந்தது. அந்தக் கார் டிரைவர் வேகத்தைக் குறைத்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. அவர் பின்பு எங்களைப் பார்த்து புன்னகைத்து விட்டு "இந்தியா மேடம் இந்தியா" என்று சொல்லி சென்றார்!!

பி.கு. :
) காரோட்டியின் 'இந்தியா மேடம் இந்தியா' புரியாதவர்கள், பின்னூட்டத்தில் விளக்கம் கேட்க்கவும்.
) இவ்வாறு 'அன்றும்-இன்றும்' நிகழ்வுகள் சிலருக்கு அளவுக்கு அதிகமாக வருவதன் காரணம் அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் விளக்கம் கூறவும்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

நினைவில் நின்றவர்கள் - அய்யங்கார் மாமா

எங்கள் வீட்டின் எதிரே இருந்த லாலா தோட்டம் எனப்படும் பெரிய காம்பௌண்டில் நான்கு சிறிய ஓட்டு வீடுகள் இருந்தன. அவற்றுள் ஒன்றில் வசித்தவர் தான் அந்த காம்பௌண்டின் care taker ஆக இருந்த அய்யங்கார் மாமா. அவரின் நிஜப்பெயர் யாருக்கும் தெரியுமா என்பது சந்தேகம் தான். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அவர் 'தாத்தா' தான். ஆனாலும் என் வயதோத்தவரும் என்னைவிட சிறியவரும் கூட அவரை 'அய்யங்கார் மாமா' என்று தான் அழைத்தோம். அவர் அய்யங்கார் மாமா ஆனதால் அவரது மனைவி அய்யங்கார் மாமி ஆனார்.

அந்த நாட்க்களில் எங்கள் வீடுகளுக்கு ஒரு நெய்க்காரர் டின்னில் நெய் கொண்டு வந்து விற்பது வழக்கம். ஆந்த நெய்க்கரர் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கையில் சிறிது நெய்யை கொசுறாக கொடுப்பதும் வழக்கம். எங்கள் வீடுகளில் அவர் அரைக்கிலோ நெய் விற்றால் இரண்டு அல்லது மூன்று கரண்டி நெய் கொசுறாக வந்திருக்கும். ஆனால் அவர் அய்யங்கார் மாமா வீட்டில் அரைக்கிலோ நெய் விற்றால் ஒரு கிலோ நெய் கொசுறாக சென்றிருக்கும்! அவர்கள் வீட்டில் அத்தனை குழந்தைகள்!!

மாமா கடைக்கு சென்று காய் வாங்கும் விதமே அலாதி. அவர் மார்கெட்டிற்கு சென்று முதலில் பார்ப்பது முட்டை கோஸ் விற்கும் கடையை. அந்த கடைக்காரன் விற்ப்பதற்கு முன் வெட்டி போட்டிருக்கும் முட்டை கோசின் மேல் தாள்கள் தான் அவர் வீட்டிற்கு கோஸ் ஆக வரும். அவர்கள் வீட்டில் மெனுவில் பல நாட்கள் கோஸ் 'கரமது' இருக்கும். அதே போல் அவர் கிலோ கணக்கில் எந்தக் காயையும் வாங்கி நாங்கள் பார்த்ததில்லை. எல்லாமே கூறு கட்டி விற்கப்படும் காய்கள் தான்.

நாங்கள் சிறுவர்களாக இருந்த அந்த காலங்களில் எங்களுக்கு எப்போதும் வியப்பை தருவது அவர் வைத்திருந்த புகையிலை பெட்டியும் (அந்தக்கால தகர பெருங்காய டப்பா) அவரது நாமக்கட்டி பெட்டியும். அவர் இல்லாத நேரத்தில் அந்த டப்பாக்களை திறந்து நோண்டுவது எங்களுக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று. அவ்வாறு நாங்கள் நோண்டும் நேரம் அவர் வந்து விட்டால், "ஏண்டா இப்டி அநியாயம் பண்றேங்கோ?" என்று கத்திக்கொண்டு அவர் எங்களை விரட்டுவதும் நாங்கள் அவர் கைகளில் சிக்காமல் ஓடுவதும் அடிக்கடி நிகழும் ஒன்று.

அவருடைய பேரன்களில் ஒருவன் தான் பாய் எனப்படும் பாலாஜி. நான், பாய், மற்றும் ராஜா மூவரும் ஒரே வகுப்பில் படித்தோம். அப்போதெல்லாம் நான் படிப்பில் புலி (மற்ற இருவரோடு ஒப்பிட்டால் என்று படிக்கவும்). அதனால் தினமும் சாயந்திரம் மாமா என் நோட்டு புத்தங்கங்களை வாங்கி சென்று அன்றைய பாடங்களை தனியாக ஒரு நோட்டு போட்டு எழுதி வைத்து பாய்க்கு சொல்லி கொடுப்பார். ஆனால் பாவம், அவர் படித்து தேர்வு எழுதியிருந்தால் கூட அந்த வயதுக்கு பிறகும் பெரிய ஆளாக வந்திருப்பார்.
இவ்வளவு முயற்சி எடுத்தும் அவருக்கு கிடைத்தது என் அம்மாவிடம் இருந்து "புஸ்தகத்த வாங்கிண்டு போய்ட்டாரா பிராம்மணன். இனி நீ படிச்சு உருப்டாப்பலதான். அவன் ஒரு வருஷமாவது fail ஆனா தான் நீ ஒழுங்கா படிக்க முடியும் போலருக்கு" என்ற வசவு தான்.

வருடங்கள் ஓடியதில், பிள்ளைகள் ஒவ்வொருவராக தனி வீடு கட்டிக்கொண்டும், வேலை நிமித்தமாக வேறு ஊர்களுக்கும் சென்ற பிறகு மாமாவும் மாமியும் மட்டும் தனியாக இருக்க ஆரம்பித்தார்கள். ஆனாலும் அவரது குசும்பும் தோரணையும் சிறிதும் மாறவில்லை. இப்படி நாட்கள் சென்று கொண்டிருந்த போது ஒரு நாள் மாமா இறந்து போனார். அவருடைய பதின்மூன்றாம் நாள் காரியத்திற்கு சமையல் நடக்கும் இடத்தில் கண்டது - அடுக்கி வைக்கப்பட்டிருந்த நான்கு முட்டை கோசும் சில அழுகிய தக்காளிகளும்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

ஒரு கிணறும் இரண்டு சிமெண்ட் தொட்டிகளும்

முன்குறிப்பு: 1980 - ம் வருடத்திற்கு பிறகு பிறந்தவர்களுக்கு இவை புதிதாக இருக்கலாம்!

எங்கள் வீடு இருக்கும் தெருவிலேயே எங்கள் வீடு தான் இன்னும் மாறாமல் அப்படியே இருக்கும் ஒரே வீடு. எங்களுடையது நீ...ள் சதுரமான மனையில் அமைந்த வீடு. மனையின் ஆரம்பத்தில் ஒரு சிறிய வீடும் அதை தொடர்ந்து பெரிய தோட்டமும் அதன் பின்னால் ஒரு வற்றாத கிணறும் இருந்தது.

இந்த கிணறு தான் எங்களின் நீர் நிலை ஆதாரம். அப்போது வீட்டின் குளியலறையில் ஒரு சிமெண்ட் தொட்டி உண்டு. நான் சிறு குழந்தையாக இருக்கும் போது, என் அம்மா மற்றும் இரண்டு அக்காக்களும் அந்த கிணற்றிலிருந்து நீர் இறைத்து சிமெண்ட் தொட்டியில் நிறைப்பதைப் பார்த்திருக்கிறேன்.

காலம் ஓடியதால் ஏற்ப்பட்ட மாற்றத்தில் சேர்ந்தது, மற்றும் ஒரு தொட்டியும் தண்ணீர் இறைக்க நானும்.
பல சமயம் விரும்பாமலும் சில சமயம் விரும்பியும் நாங்கள் செய்த வேலை நீர் இறைப்பது. ஆனால் நாங்கள் அனைவரும் 'பணி நிறுத்தம்' செய்தாலும் என் அம்மா மாட்டும் முகம் மாறாமல் எங்கள் அனைவருக்கான நீரையும் இறைப்பார்.

பல விடுமுறை நாட்கள் சிமெண்ட் தொட்டியினை சுத்தம் செய்வதில் கழியும்.
அந்தக் காலங்களில் நான், என் அம்மா, மற்றும் அக்காக்களும் ஒன்றாய் இருந்த குடும்ப நேரங்கள் நிறைய. அதில் பலவும் இந்த நீர் இறக்கும் நேரங்கள் தான். கிணற்றில் இருந்த ராட்டினமும், அதன் க்ரீச் ஒலியும், தாம்புக் கயிறும், அதில் மாட்டிய வாளியும், நீண்ட பாரம் சுமந்த நடைகளும், அந்த இரு சிமெண்ட் தொட்டிகளும் என் நினைவில் என்றும் மாறாதவை.

காலம் மேலும் ஓட, இரு அக்காக்களும் திருமணம் ஆகி சென்றனர். அப்போது தான் எங்கள் வீட்டிற்க்கு மோட்டார் பும்ப்பும் குழாயில் நீரும் பாங்கில் வேலை செய்த என் அண்ணனால் வந்தது. ஆனால் அது என் அம்மா உடல் நலம் குன்றி நடை குறைந்த பின்னால் வந்தது எனக்கு இன்று வரை மிகுந்த குறை தான்!

குழாய் நீர் வந்த பிறகு தொட்டிகளுக்கு இருந்த மவுசு குறைந்தது. அவை மெதுவாக புழக்கடைக்கு வந்து, பின்னர் ஒரு பக்கம் உடைந்து, நாளடைவில் யாரும் உணராத ஒரு தருணத்தில் குப்பைக்குச் சென்றன. ஆனாலும், கிணறு அப்படியே இருந்தது. எனக்கு அதன் மேல் இருந்த பாசத்தால் அடிக்கடி சென்று அதை நலம் விசாரித்து வருவேன்.

மேலும் காலம் சுழன்றது. நானும் திருமணமாகி போனபின், அம்மா வீட்டுக்கு வரும்போதெல்லாம் என் பிரியமான கிணற்றையும் நலம் விசாரித்துக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம், என் மகளையும் உடன் அழைத்துச் சென்று, அவள் அறிந்திராத கிணற்றையும், ராட்டினத்தையும், தண்ணீர் இறைக்கும் முறையையும் காண்பிப்பேன். அவளும் அதை ஆச்சரியமாகப் பார்ப்பாள். அவள் அவ்வாறு பார்க்கும் போதெல்லாம் என் பிரியமான தோழியை அவளுக்கு அறிமுகப்படுத்திய மகிழ்ச்சி கிடைக்கும்.

சமீபத்தில், அந்த கிணற்றைப் பகிர்ந்து கொண்டிருந்து அடுத்த வீட்டுக்காரரின் வேண்டுகோளின் பேரில் என் அப்பா அந்தக் கிணற்றை மூடிவிட்டார். சென்றமுறை வீட்டிற்கு சென்றபோது கிணற்றடியை சென்று பார்த்தேன். ஏனோ, இறந்த என் தோழியின் உடலை பார்ப்பது போலிருந்தது!

புதன், 18 பிப்ரவரி, 2009

And I am finally into the world of blogging after so much resistance!
Though I am an avid blog reader, I have always resisted to be a blogger for the following reasons:

  • I did not want to get addicted to this.
  • Laziness. Reading is always easier than writing, you know!

And if you are wondering why I started this now...........
Keep wondering, as I myself am wondering why.....................

One probable reason could be the whole lot of events and excitement that have been happening over the couple of past days.

One fine sunday afternoon, my old long lost school mate MSK called me.
As soon as I heard is voice, I was wondering as to how he got my number.
By then he had answered my question and had added more excitement to the conversation.

Yes.....

He was trying for a re-union of the school mates of our batch.

I would not mention the year for you would guess my age ;)

Its about 10 days now since I spoke to him and this effort has gathered a lot of momentum.
Thanks to MSK and KK, who gathered everybody together and have started a google group.

It has been a nostalgic week reviving contacts with old "Chaddi Buddies".

Now, I am going down the memory lane.
Will get back in the next blog with all the nostalgic memories of the shool days!