ஞாயிறு, 4 அக்டோபர், 2009

ரங்கமணிக்கு நன்றி

எங்க வீட்டு ரங்கமணி புண்ணியத்துல போன வாரம் ஒரு கேரளா ட்ரிப் அடிச்சுட்டு வந்தோம். பரவாயில்ல மனுஷன் நல்லாவே கார் ஓட்டறாரு. மலைப்பாதைல கூட ஜாலியா பாட்டு பாடிட்டே ஒட்டினாறு. நமக்கு தான் மோதல் கொஞ்ச நேரத்துக்கு பயத்துல ஜுரம் வந்துடுச்சு. ஆனா நாம வெளில காமிப்பமா??!!! ரொம்ப தைர்யமா கூடவே பாடிட்டே வந்தோம்ல!

மொதல்ல குருவாயூர் போய் ஒரு நாள் தங்கி சாமி தரிசனம் செஞ்சுட்டு அப்படியே குருவாயூரையும் சுத்திப் பார்த்தோம். அடுத்தநாள் காலைல ஜி பி எஸ் உதவியோட அதிரப்பள்ளி போயிட்டு அப்படியே திரிச்சூர் வந்து வடக்கு நாதரைப் பார்த்துட்டு கெளம்பி வந்தோம்.

ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல பிரேக். தேங்க்ஸ் டு ரங்கமணி!!

ட்ரிப் பத்தின விரிவான செய்திகள அடுத்த பதிவுல போடறேன்.

நம்ம வீட்டு கொலு

நம்ம வீட்டு கொலுவுக்கு வந்தவங்களுக்கெல்லாம் நன்றி .
வர முடியாதவங்களுக்காக இதோ சில புகைப்படங்கள்: