புதன், 9 செப்டம்பர், 2009

ஒரு தொலைபேசி உரையாடல்

நேற்று விஷ்வநாதன் அங்கிளுக்கு போன் செய்திருந்தேன்.
அங்கிள்: ஹலோ
நான்: அங்கிள், நான் தான்
அங்கிள் (ஒரு வினாடிக்குப் பிறகு): நான்னா? ஆத்மாவா, உயிரா, இல்ல ஒடம்பா?
நான் (சிறிது திகைத்து): 'நான்' இன்னும் இருக்க ஒரு ஆத்மா
அங்கிள்: ஓஹோ. நான் தன்தூர்ல இருக்க நானோன்னு நெனச்சேன்
நான்: நானும் தந்தூர்ல இருக்கற ஒரு 'நான்' தான். தந்தூர்ல இருக்கறதால தான் 'நான்' இன்னும் இருக்கோ?
அங்கிள்: ஹா ஹா ஹா
நான்: இல்ல ஒருவேள 'நான்' இன்னும் இருக்கறதால தான் இன்னும் தந்தூர்ல இருக்கேனோ?!!
அங்கிள்: ஹா ஹா ஹா... இருக்கலாம்! யோசிக்க வெக்கற விஷயம் தான்.


இதற்குப் பிறகு நாங்கள் பல்வேறு விஷயங்கள் பேசினோம். ஆனால் மேல் சொன்ன உரையாடல் எங்களை யோசிக்க வைத்தது!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக