திங்கள், 23 ஆகஸ்ட், 2010

எதையும் ஒரு முறை

என்ன சுஜாதாவோட நாவல் டைட்டில் மாதிரி இருக்கேன்னு யோசிக்கறீங்களா?
அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க, இது நம்ம சொந்த கதை சோகக்கதை.

எங்க வீட்டு தங்கமினிக்கு எப்பவும் அம்மாவுக்கு தான் எல்லாம் தெரியும்னு ஒரு நெனப்பு. அவங்க அப்பா சொன்னா கூட ஒரு தடவ என் கிட்ட கிராஸ் செக் செஞ்சுப்பா. எதுவா இருந்தாலும் என்னை தான் நம்ம்ம்பி கேப்பா. எதையும் ஒரு முறை (அப்பாடி! டைட்டில் வந்துருச்சு.) என் வாயால கேட்டா தான் அவளுக்கு திருப்தி.

இது இப்படி இருக்கறப்போ, ஒரு சுப யோக சுப தினத்துல அவங்க மிஸ் (அவங்களுக்கு நான் என்ன பாவம் செஞ்சேன்!) ஒரு இந்திய பொலிடிகல் மேப்ப குடுத்து, அதுல எல்லா ஸ்டேட் capitals உம் மார்க் பண்ணி எடுத்துட்டு வர சொன்னாங்க. அவங்க அப்பா, "நான் ஹெல்ப் பண்றேன்"னு சொன்னதுக்கு கூட, மினி, இல்லப்பா எதுக்கும் அம்மா வந்துடட்டும்னு சொன்னா. அப்பவே, ரசத்துக்காக கரைசுக்கிட்டுருந்த புளி, என் வயத்துலயும் கரைய ஆரம்பிச்சுடுத்து. நானும் நல்ல மாதிரி, "இல்லம்ம்மா, அம்மா பிஸியா இருக்கேன்ல, அப்பா கிட்ட கேட்டுக்கோன்னு" சொன்னேன். ஆனா அவ ரொம்ம்ம்ப தெளிவா இருந்தா - நீ வந்த மேப்பு, இல்லேன்னா வெளையாட கேப்புன்னு. எந்த ஸ்டேட் க்கு எந்த கேபிடல் னு தெரியுமே ஒழிய, அந்த கேபிடல் மேப்புல எங்க இருக்குன்னு எல்லாம் கேப்பாங்கன்னு நான் கண்டேனா? இதுக்கு தான் படிக்கற வயசுல ஒழுங்கா படிக்கணும்கறது. அந்த காலத்துல, 10th எக்ஸாம்க்கு முன்னாடி, ப்ரோடோ மிஸ் என்னை பார்த்து "விஜி, நீ டைம் இருந்தா மேப் அட்டெம்ப்ட் பண்ணு இல்லன்னா விட்டுடு" னு சொன்னதுக்கு அர்த்தம் இப்ப தான் தெரிஞ்சுது.

சரி, விதி வலியதுன்னு நானும் போய், உதாரா நமக்கு தெரிஞ்ச நாலஞ்சு எடத்த சரியா மார்க் பண்ணி குடுத்துட்டேன். அப்புறம், "ஏம்மா, எதுக்கும் அந்த அட்லஸ் எடு. சரியாய் பார்த்து எழுதிடலாம்னு" சொன்னேன். அதுக்கே ஒரு மாதிரி பார்தவ, நான் அட்லஸ் அ தேடி பார்த்ததை பார்த்துட்டு விட்டாளே ஒரு லுக்! ஹ்ம்ம்.. என்னமோ போங்க. போற போக்க பார்த்தா, நான் வேலைய விட்டுட்டு, history geography எல்லாம் மோதல்லேருந்து ஒரு தடவ படிச்சு வெச்சுக்கறது நல்லதுன்னு தோணுது. பார்ப்போம்!

டிஸ்கி: இந்த பதிவுக்கு "மேப்பு வெசுட்டாய்யா ஆப்புன்னு" உம் ஒரு டைட்டில் யோசிச்சேன். அப்புறம், சுஜாதாவா இல்ல வடிவேலுவான்னு ஒரு சின்ன மனப்போராட்டதுக்கப்புறம், சுஜாதா தான்னு (ஹி...ஹி.. எப்பவும் போல) முடிவுக்கு வந்துட்டேன்.