செவ்வாய், 19 அக்டோபர், 2010

எந்திரன் பார்த்த பின் என் மனதில் தோன்றிய சில "நன்றாக இருக்கும்" எண்ணங்கள்!

டிஸ்கி: இவை என் சொந்த கருதுதுக்கள் மட்டுமே. நான் என்ன சின்னதிரைலையா வந்து விமர்சனம் சொல்றேன். என் ப்ளாக் தானே எழுதறேன். விடுங்க விடுங்க பாஸ்! ஏதோ முந்நூறு ரூபா ஒரு டிக்கெட் க்கு கொடுத்த வேகத்துல எழுதறேன். என்ன தான் தலைவருக்காக படத்த ரசிச்சாலும் பாழும் மனசு சும்மாவிடுதா.
  • ரஜினிகாந்த், இனி அமிதாப் பச்சன் போல தன வயதுக்கு தகுந்த பாத்திரங்களில் மட்டுமே நடித்தால் நன்றாக இருக்கும்.
  • தமிழ் திரை உலக பாடலாசிரியர்கள் இனி தங்கள் பாடல் வரிகள் புரியுமாறு இசைஅமைத்தால் மட்டுமே A R ரஹமானின் இசையமைப்பில் பாடல்கள் எழுதுவோம் என்று அறிவித்தால் நன்றாக இருக்கும்.
  • A R ரஹமான் வெறும் synthesizer - மட்டும் நம்பாமல், நம் பாரம்பர்யம் மிக்க தாளவாதியங்கள் மற்றும் தந்தி வாதியங்களையும் உபயோகித்தால் நன்றாக இருக்கும். (என்ன இருந்தாலும் ராஜா ராஜா தான்!)
  • சூப்பர் ஸ்டார் தான் உபயோகிக்கும் லிப் ஸ்டிக்கின் அளவை குறைத்தால் நன்றாக இருக்கும்.
  • இயக்குனர் ஷங்கர், தன முந்தைய படங்களான முதல்வன் மற்றும் இந்தியனில் இருந்தது போல costume களில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். (ஐஸ்வர்யா ராயின் உடைகள் சகிக்கவில்லை!)
  • சந்தானம், பாஸ் என்கிற பஸ்கரனில் நடித்தது போல நல்ல சிரிக்க மற்றும் ரசிக்கத் தகுந்த பாத்திரங்களில் மட்டும் நடித்தால் நன்றாக இருக்கும்.
  • கடைசியாக, (last but definitely not the least), ஐஸ்வர்யா ராய் தயவு செய்து நடிப்பதை நிறுத்தினால் நன்றாக இருக்கும். ஹ்ம்ம்... நாம ஆசைப் படரதேல்லாம் நடந்துடுதா என்ன!