வியாழன், 23 டிசம்பர், 2010

சுனிதா சாமி யமுனா சாமி

என் ஸ்கூல் friends சுனிதாவும் யமுனாவும். அவங்க எப்படி எங்களுக்கு சாமி ஆனாங்கங்கறது தான் இந்த கதை.

நான் எட்டாப்பு படிக்கும்போது (அட சத்தியமா படிச்சேங்க, நம்புங்க!) எங்க பள்ளிகோடத்துல மெர்சி மிஸ் மெர்சி மிஸ் னு ( ரெண்டு பேர் இல்லீங்க ஒருத்தர் தான்) ஒரு கணக்கு டீச்சர் இருந்தாங்க. ரொம்ப நல்லவங்க. (சத்தியமா தாங்க). என்ன, கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். பொம்பள பசங்க பாய்ஸ் கூட பேசக்கூடாது, ஸ்கூலுக்கு வெளிய நின்னு அரட்டை அடிக்க கூடாதுன்னு சின்ன சின்ன விஷயம்லாம் எதிர் பார்ப்பாங்க. எங்க கிளாசுக்கு அப்போ அவங்க கணக்கு எடுக்கல.

அந்த காலத்துல எல்லாம் நாங்க ரொம்ப நல்ல பசங்க (உஷ்... யாரங்க சிரிக்கறது?) அப்டியாப்பட்ட நேரத்துல, ஒரு நாள் ஸ்கூலுக்கு வெளிய நானும் என் பிரெண்ட் சுனிதாவும் யமுனாவும் நின்னு பேசிக்கிட்டிருந்தோம். ஏதோ அறியாத வயசு, கொஞ்சம் சத்தமா சிரிச்சு பேசிட்டிருந்தோம். அப்போ திடீர்னு இந்த ரெண்டு பய புள்ளைகளும் அமைதி ஆயிடுசுக. இதுல இருக்க வில்லங்கம் தெரியாத நானு, செரி அவுகளுக்கு தானே சிரிப்பு நின்னு போச்சு, நமக்கு இன்னும் வருதுல்லன்னு continue பண்ணேன். அடுத்த நாள் ஸ்கூலுக்கு போனா, மெர்சி மிஸ் கூப்டனுப்பினாகன்னு தாக்கல் வந்துச்சு. நமக்கு தான் building strong basement weak ஆச்சே. ஒதரிகிட்டே ஒரு மாதிரி போய் நின்னேன். உடனே மிஸ் என்ன பார்த்து, "இப்படி தான் ரோட்ல நின்னு சிரிக்கறதா? பொம்பள புள்ளைக்கு அடக்கம் வேணாம். சுனிதா சாமி யமுனா சாமின்னு" திட்டினாங்க. அப்போ தான் எனக்கு புரிஞ்சுது இந்த பய புள்ளைக என்ன மட்டும் மாட்டிவிட்டுட்டு அதுக ரெண்டும் s ஆயிடுசுகன்னு. இதென்னடா வம்பா போச்சு, ரோட்ல நின்னு சிரிக்கலன்னா அவங்க சாமி ஆயிடுவாங்களா? மிஸ்ஸுக்கு தான் சுனிதா மேலயும் யமுனா மேலயும் என்ன நல்ல மதிப்பு. நாம தான் சாமியாகர வாய்ப்ப எழந்துட்டோம் னு ஒரு வருத்தமா போச்சு. இப்படியா யோசிச்சுக்கிட்டு நான் பேந்த பேந்த நிக்கவும், மிஸ் "சரி போ. இனிமே இப்படி பண்ணாதேன்னு" அனுப்பி விட்டுட்டாக. (என்ன punishment கெடைச்துன்னு ஆவலா படிச்சுக்கிட்டு இருந்தவங்களுக்கெல்லாம் - பல்பு)

ஆனாலும், எனக்கு அவங்க ரெண்டு பெரும் சாமியானதும் நான் ஆகாததும் கொஞ்சம் வருத்தம் தான். கிளாசுக்கு வந்து இத மத்த பசங்க கிட்ட சொன்னதும் எல்லாரும் கொஞ்ச நேரம் முழிச்சுட்டு (ஏதோ நான் மட்டும் தான் முழிச்சேன்னு நீங்க நெனைச்சுட கூடாது இல்ல) அப்புறம் யாரோ ஒரு அறிவு ஜீவி (யாருன்னு ஞாபகம் இல்ல) சொல்லிச்சு அது "சுனிதா சாமி யமுனா சாமி" இல்ல. அது "சுனிதா saw me யமுனா saw me" னு. அப்புறம் தான் எனக்கு போன உசுரே திரும்பி வந்துச்சு. இப்டி தான் என் friends சுனிதாவும் யமுனாவும் எங்களுக்கு சாமி ஆனாங்க.

டிஸ்கி: இது நடந்து ரெண்டு வருஷம் கழிச்சு, நான் பத்தாப்பு படிக்கும் போது இதே மிஸ் எங்களுக்கு கணக்கு டீச்சர். அப்போ நான் தான் அவங்க favourite ஸ்டுடென்ட். (அட..யாரங்க விழுது விழுந்து சிரிக்கறது. பார்த்து அடி கிடி படப்போகுது. சொன்னா நம்பனும். இப்டி சந்தேகம்லாம் படப்பிடாது. ) கண்டிப்பா இத உண்மையான்னு தெரிஞ்சே ஆகணும்னு நெனைக்கறவங்க, என் friend MSK கிட்ட கேளுங்க. ஒரு நாள் answer ஷீட்ட distribute பண்ணிட்டு, மிஸ் Dr Jekyll and Mr Hyde ஆ மாறி ஒரு பக்கம் MSK வ கொதறி தள்ளிக்கிட்டு இன்னொரு பக்கம் என்ன கொஞ்சின கதைய கண்ணீர் கதையா சொல்லுவான். அப்பவாவது நம்பறீங்களா பார்க்கலாம். என்ன MSK ஞாபகம் இருக்கா?

1 கருத்து: