வியாழன், 15 ஏப்ரல், 2010

ஸ்ரீரங்கம், ரங்கநாதன், மற்றும் நான்

நாங்கல்லாம் காஞ்சீபுரதுக்காரா. ஸ்மார்த்தா. எங்க அப்பா வீட்டு குல தெய்வம் பிரளயம் காத்த ஷக்தி. இவள் ஏகாம்பரேஸ்வரர் கோயில் ப்ராகாரத்துல ஜம்முனு உக்காந்து இருப்பா. எங்க இஷ்ட்ட தெய்வம் காமாக்ஷி அம்மன்.

இதையெல்லாம் தாண்டி, ஸ்ரீரங்கத்துல அனந்த சயனதுல இருக்க ரங்கநாதர் மேல எனக்கு எப்பவுமே ஒரு ஈர்ப்பு.
அது பக்தியா, பாசமா, அன்பா, பயமா, காதலான்னு தெரியாத ஒரு உணர்வு.
எப்போ நான் அங்கே போனாலும் என்னை priority basis கூப்பிட்டு சௌக்கியமான்னு விசாரிப்பார். அது எவ்ளோ கும்பலா இருந்தாலும் சரி. ஏதோ ஒரு வழில நமக்கு சிறப்பு தரிசனம் தான்.
இந்த வருஷம், நம்ம வீட்டு ரங்கமணிக்கு என்ன தைர்யம்னு தெரியல. வைகுண்ட ஏகாதசி அப்போ, எந்த ரூம் reservation உம் பண்ணாம திடீர்னு கெளம்பு திருச்சி போகலம்ன்னார். மத்த எடம்னா, reservation இல்லாம கெளம்ப மாட்டேன்னு அடம் பிடிப்போம். ஆனா, ஸ்ரீரங்கமன்தும், நாமும் ரங்கநாதர பாக்கற ஜோர்ல கெளம்பிட்டோம்.
அங்க போய் ரூம் கெடைக்காம ஸ்ரீரங்கம் தெருவெல்லாம் சுத்தினத தனி பதிவாத்தான் போடணும்.
இப்போ ரங்கநாதருக்கு வருவோம்.
கோயிலுக்கு போனா அங்க அனுமாரும் வந்திருக்கார் போல. நாங்க அவர் வால மட்டும் தான் பார்த்தோம். queue ரூபத்துல!
நம்மால ரொம்ப நேரம் நிக்க முடியாது ன்னு தெரிஞ்சு ரங்கமணி போய் ரெண்டு ஐநூறு ருபாய் டிக்கெட் வாங்கி வந்தாரு.
(நிக்க வெச்சா வெயில் காலத்துல நாமும் வருதேடுப்போம்னு இந்த பத்து வருஷத்துல தெரிஞ்சிருக்கும்ல!)
ஆனா அந்த ஐநூறு ருபாய் queue வுக்கும் நல்ல கும்பல்.
ஆனா அது என்ன மாயமோ தெரியல, நான் கிட்ட போனதும், நம்ம ஸ்ரீரங்கம் ரங்கஸ், நமக்குன்னு எடத்த கிளியர் பண்ணி விட்டுட்டாரு.
கிட்ட போய் நின்னு, அந்த gigantic உருவத்த பாத்தா, ஹ்ம்ம்....
ரங்கநாதா, ரெண்டாம் பத்தில சொன்னா மத்த உணர்வெல்லாம் எங்கே வருது. எங்கே நீ கண்ண குத்திடுவியோன்னு ஒரு பயம் கலந்த பக்தி தான் வருது.
ஆனா, பார்த்துட்டு திரும்பி வந்த மறு நிமிஷம், back டு para 2
இந்த தடவ, நமக்கு ஸ்பெஷல் முத்தங்கி சேவை தரிசனம் வேற குடுத்தாரு.
ஆஹா என்ன அழகு! இந்த அழகுக்கு அவர சுத்தியும் பன்னிரண்டு நாச்சியார் மட்டுமே இருப்பது ரொம்ப கொறச்சல் தான்.
ரங்கநாதர் தரிசனம் முடிச்சு, கோயில் வாசல்ல, ரங்கமணி மொறைக்க மொறைக்க (இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா நமக்கு), ஒரு இரும்பு தவா, கல் சட்டி எல்லாம் வாங்கி முடிச்சு ஸ்ரீரங்கம் தெருவெல்லாம் சுத்தினோம்.
ரங்கமணிய, அடையவளஞ்சான் வீதி எதுன்னு விசாரிக்கச் சொன்னேன். அவரும் நாம யாரையோ பாக்கணுமோ, இல்ல எதாவது கோயில் இருக்கோன்னு நெனைச்சு ரொம்ப பொறுப்பா விசாரிச்சு கூட்டிட்டு போனாரு. கடைசில ரொம்ப கடுப்பயிட்டாறு. அது ஏன்னு கடைசில சொல்றேன்.
இப்படியே தேரடி, வடக்கு சித்திரை வீதின்னு சுத்தினோம்.
நம்ம நண்பர்களான மாஞ்சு, ரங்கு, ரா.வி.ரா, பத்தணா அய்யங்கார் எல்லாரையும் நெனைச்சிக்கிட்டேன்.
ரங்கமணி கிட்டயும் இதப்பத்தி எல்லாம் பேசிக்கிட்டே வந்தேன்.
(இவிங்க எல்லாரும் யாரு, இவிங்களுக்கு உன்ன தெரியுமான்னு கேக்கப்பிடாது. எனக்கு IG தெரியும் ஆனா அவருக்கு என்ன தெரியாதுங்கரா மாதிரி தான் இதுவும்)
மேல சொன்னா இடங்களும் ஆட்களும் பலருக்கும் பரிச்சயமானது தான்.
இதெல்லாம் சுஜாதாவோட ஸ்ரீரங்கத்து அடையாளங்கள்.
ரங்கநாதர் மேல இருக்க ஈர்ப்பால சுஜாதாவ பிடிச்சு அதனால் ஸ்ரீரங்கம் என் உணர்வுல கலந்துதா.
இல்ல சுஜாதாவால ஸ்ரீரங்கத்து மேலயும் ரங்கநாதர் மேலயும் ஈடுபாடு வந்துதான்னு இன்னி வரைக்கும் என்னால கண்டு பிடிக்க முடியல.

ஆனா, ஸ்ரீரங்கமும், ரங்கநாதரும் எப்பவும் என்னை ஈர்ப்பது நிஜம்.

இப்போ ரங்கஸ் ஓட கோவத்துக்கு காரணம் சொல்லிடறேன்.
ரொம்ப ஆர்வமா அடையவளஞ்சான் வீதிய கண்டு பிடிச்சி இப்போ எங்கே போகணும்னு கேட்டாரு.
நான், அங்கே ஃபுல்லா சுத்த விட்டுட்டு கடைசில, சும்மா சுஜாதாவோட ஸ்ரீராங்கத்த சுத்தி பார்க்கணும்னு தான் கேட்டேன்னு சொன்னேன்.
மனுஷன் கடுப்புல வெந்து நொந்துட்டாறு.
செம பசியில இருக்கும் போது இது தேவையான்னு ஒரு வார்த்த, ஒரே ஒரு வார்த்த தாங்க சொன்னாரு.
நமக்குள்ள சிநேகமா இருந்த சிங்கத்த சீண்டிப்பார்துட்டாறு இல்ல. அது சும்மா விடுமா? எப்படி நான் என் சுஜாதாவோட ஸ்ரீராங்கத்த சுத்தி பார்க்கற போது இப்படி சொல்லப்போச்சுனு வந்துதே ஒரு கோவம்.
அப்புறம் என்ன, ஸ்டார்ட் மீசிக் தான்!

ரொம்ப நாளா மறந்து இருந்த அவரோட favourite டயலாக் மறுபடியும் சொல்ல ஆரம்பிச்சுட்டார்.
என்னது? அது என்னவா? அது "எப்பவுமே அவளோட first love சுஜாதா தான். அதுக்கப்புறம் தான் நான்!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக