வெள்ளி, 16 ஏப்ரல், 2010

திருச்சி ட்ரிப் - பார்ட் 1

சரி, ஸ்ரீரங்கத்த பத்தி எழுதின கையோட திருச்சி ட்ரிப் பதியும் எழுதிடுவோம் ஒரு வேகம்.
வைகுண்ட ஏகாதசிக்கு மொத நாள் நான் ஏற்கனவே சொன்னா மாதிரி திருச்சி ட்ரிப் அடிப்போம்னு கெளம்பினோம். எங்கே போறதனாலும் கார்லயே போய்டறது ஒரு சௌகர்யம் தான்.
பெங்களூர்ல கெளம்பி, ஹோசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் வழியா போகலாம்னு ரூட் மேப் எல்லாம் ரெடி பண்ணிண்டு கெளம்பினோம். எங்களோட எல்லா இழுப்புக்கும் எங்க வீட்டு தங்க'மினி' தயாரா இருப்பது ஒரு பெரிய ஆறுதல். இந்த சந்தர்ப்பத்துல அவளுக்கு ஒரு பெரிய 'நன்றி'.

முதல் ஸ்டாப் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்ல நிறுத்தினோம். மத்தியான நேரத்துல போனதால பூஜை எல்லாம் பார்க்க முடியல. ஆனா ஆஞ்சநேயர் திறந்த வெளில நிற்பதால் தரிசனம் நல்லா கெடைச்சது. இங்கே இருக்கற ஆஞ்சநேயர் வளர்ந்துண்டே இருப்பதால் அவருக்கு கூரை கோபுரம் எல்லாம் இல்லைன்னு கேள்வி பட்டிருந்தேன். இதப்பத்தி அங்கே இருந்த ஆபீசில ஒருத்தர் கிட்ட விசாரிச்சேன். ஆனா அவர் இதெல்லாம் டூப் என்றும் ஆஞ்சநேயர் அப்படி எல்லாம் வளர்வது இல்லைன்னும் சொன்னார். ஆஞ்சநேயருக்கு எதுத்தாப்போல இருக்க மலையே நரசிம்ம சொரூபம்னும், அப்படிப்பட்ட நரசிம்மருக்கே கூரையோ கோபுரமோ இல்லாத போது இவர்க்கு கட்டக்கூடதுன்னும் தான் கூரை இல்லையாம்.

இந்த சமயத்துல தான், நம்ம 'மினி', "அம்மா, இந்த ஆஞ்சநேயருக்கு மாலை போடணும்னா ஒரு பக்கம் தான் படி வெச்சு கட்டியிருக்காங்க. அப்போ எப்டி மாலய எட்டி முழுசா போடுவாங்க?", "அம்மா, இந்த ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாத்தனும்னா எவ்ளோ லிட்டர் பால் வேண்டியிருக்கும்?" னு டெக்னிகலா கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டா. (நான் மனசுக்குள்: உக்கும்... இந்த கேள்வியெல்லாம் உங்க அப்பா கிட்ட கேக்க வேண்டியது தானே). நான் உடனே, சரிடப்பா ஆஞ்சநேயா. இந்த கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்லனும்னா, நீ என்னோட அறிவ அளவில்லாம வளர்க்கணும். அது உனக்கும் ரொம்ப கஷ்ட்டமான விஷயம். அதனால உத்தரவு வாங்கிக்கறேன்னு, அங்கேந்து கெளம்பினேன்.

ரங்கமணிக்கு, வெயிட் பண்ணி நாலு மணிக்கு நரசிம்மர் கோயில் தரிசனம் பார்த்துட்டு கிளம்பனும்னு ஆசை. ஆனால், அதுக்கப்புறம் கெளம்பினா லேட் ஆயிடும்னு அவரை ஒரு வழியா சமாதனா படுத்த முயற்சி பண்ணி, அது தோத்து போய், அதுக்கப்புறம் நானே நரசிம்ம அவதாரம் எடுத்தப்புறம் தான் கிளம்பினார்.
அங்கேருந்து கெளம்பி வழியில குணசீலம் பெருமாள தரிசனம் பண்ணோம்.
(நீங்கல்லாம், சரியான எடத்துக்கு தான் போயிருக்கான்னு சொல்றது காதுல விழுது. சரி, சரி... நோ சில்லி பீலிங்க்ஸ்)

அப்புறமா ரொம்ப ஆர்வமா காவேரிய பாக்கணும்னு கெளம்பி திருச்சி போனோம். அங்கே தேசலா ஓடிக்கிட்டுருந்த காவேரிய பார்த்து ரொம்ப வருத்தமாயிடுச்சு. என்ன தான் நாங்க பெங்களூர்ல இருந்தாலும், நாங்க பண்றது எங்களுக்கு அநியாயமா தான் இருக்கு. என்ன பண்றது!

சரி. ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கறேன். மீதி பார்ட் டூ ல தொடர்ரேன்.
வர்ட்டா!!

1 கருத்து: