வெள்ளி, 4 செப்டம்பர், 2009

எது நாகரீகம்?

இது ஒரு சில வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம்.

ஒரு நாள், நாங்கள் முன்பு குடி இருந்த வீட்டின் சொந்தக்காரருக்கு வாடகையை தர மகளுடன் சென்றிருந்தோம். அப்போது என் மகளுக்கு நான்கு வயதிருக்கும். அவர்கள் வீட்டில் எங்களுக்கு ஒரு சிறிய கப்பில் மிக்ஸ்ச்சரும் ஸ்வீட்டும் தந்தார்கள். நாங்கள் நாகரீகம் கருதி சிறிது மிக்ஸ்ச்சர் மட்டும் எடுத்துக் கொண்டு விட்டு அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது என் மகள் அவளுடைய ஸ்வீட்டை தின்று விட்டு பின்னர் எங்களுக்காக வைத்திருந்த ச்வீட்டையும் எடுத்துத் தின்றாள். நாங்கள் நாகரீகம் கருதி அங்கு ஏதும் பேசாமல் இருந்து விட்டோம். பின்னர் வெளியே வந்த பிறகு நான் அவளிடம், "யார் வீட்டிலாவது தின்பதற்கு ஏதாவது கொடுத்தால் இப்படி எல்லாவற்றயும் தின்னக் கூடாது. அது அநாகரீகம்" என்றேன். அநாகரீகம் என்றால் என்ன என்று புரியாத அவள் என்னிடம், "ஆனால் அம்மா, நாம் சாப்பிடக் கூடாது என்று அவர்கள் நினைத்தால் பின்பு எதற்கு அவற்றை நம்மிடம் கொடுத்தார்கள்?" என்று கேட்டாள்.

அன்று முதல் முறையாக, நாகரீகத்தைப் பற்றி நாம் தவறான கருத்துக்கள் கொண்டிருக்கிறோமோ என்று எண்ணினேன்.

3 கருத்துகள்:

  1. வருகைக்கு நன்றி பித்தன்!
    என் ஆசிரியர் தினம் பற்றிய இடுகையில் என் மிகப் பெரிய ஆசிரியருக்கு நன்றி கூற மறந்து விட்டேன்.
    நன்றி மகளே!!

    பதிலளிநீக்கு
  2. good, but if you told like this we have to say all living things and non living things which we have learn from them lot

    பதிலளிநீக்கு